என் அணிக்கும், என் குடும்பத்தினருக்கும் சக இந்தியர்களுக்கும், சொல்லிக் கொள்வது, நாம் எந்த இலக்கை அடைவதற்காக உழைத்தோமோ, அது நிறைவேற்றப்படாமல் இருப்பதாக உணர்கிறேன். சில நேரங்களில் நாம் தவறவிட்டவை, நமக்கு கிடைக்காமலே போய்விடும். வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்பு உள்ளது. என் போராட்ட குணமும், மல்யுத்தமும் எப்போதும் எனக்குள் இருக்கும். வருங்காலத்தில் எனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை கணிக்க முடியாது. ஆனால், என் மனதுக்கு சரி என தோன்றும் விஷயங்களை அடைய தொடர்ந்து துணிச்சலுடன் போராடுவேன்” பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தகுதி நீக்க விவகாரத்துக்கு பின் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ளார்.
The post வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை தொடர வாய்ப்பு உள்ளது: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உருக்கம் appeared first on Dinakaran.