செய்யாறு, டிச.3: செய்யாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.டெல்லியில் புதிய வேளான் சட்டத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக செய்யாறு- ஆற்காடு சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வட்டார செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார குழு உறுப்பினர் வெ.சங்கர் முன்னிலை வகித்தார். முற்றுகை போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 47 பேரை கைது செய்தனர்.