வந்தவாசி, டிச.3: 36 ஊராட்சிகளில் நடக்கவிருக்கும் வளர்ச்சிப்பணிக்கான ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் பிடிஓ தலைமையில் நடந்தது.வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வந்தவாசி பிடிஓ அலுவலகத்தில் பிடிஓ ப.பரணிதரன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. பொறியாளர் ரவிமலரவன், துணை பிடிஓக்கள் மாணிக்கவரதன், சங்கர், வில்வபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் ஏற்கனவே 15 ஊராட்சிகளில் ₹2.85 கோடியில் வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றது. மேலும், 36 ஊராட்சிகளில் ₹3.37 ேகாடியில் இந்த வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்த உள்ளது.