அறந்தாங்கி, டிச.3: புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புரெவி புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் வட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதில் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும், அறந்தாங்கி நகரம், காவிரி பாசன பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.