முஷ்ணம், டிச. 3: கோயில் குளத்தில் குளித்த மாணவன் நீச்சல் தெரியாமல் தத்தளித்த நிலையில் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராகுல் (18) உள்பட 4 மாணவர்கள் கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று காலை பூவராகசுவாமி கோயில் குளத்தில் இறங்கி குளித்தனர். அவர்களில் ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் தத்தளித்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.