கோபி,டிச.3: கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் கவுதம்கார்த்திக், தொழிலதிபர். இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் கோபால கிருஷ்ணன் என்பவரும் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கார் நம்பியூர் அருகே உள்ள மூனாம்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த கீழ்பவானி வாய்க்காலில் கவிழ்ந்தது.