புதுக்கோட்டை, டிச.2: மத்திய அரசு விவசாய,விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா தலைமை வகித்தார். கீரனூரில் முருகேசன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தர், உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை நகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்)சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் புரட்சிகர இளைஞர் கழக மாவட்டச்செயலாளர் .தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.