விஷம் குடித்த தொழிலாளி சாவு

கேடிசி நகர், மே 5: கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை மருதுகுறிச்சியைச் சேர்ந்த தங்கையனின் மகன் சேகர் (45). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். கட்டிடத் தொழிலாளியான சேகர், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் விரக்திக்கு உள்ளான இவர், சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதுகுறித்து தெரியவந்ததும் பதறிய சக தொழிலாளர்கள் , அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷம் குடித்த தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: