தனியார் ஊழியரிடம் ₹3.23 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, மே 5: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (52). இவர் போச்சம்பள்ளியில் உள்ள எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 7ம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் கொடுத்திருந்த லிங்கை அவர் கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டிருந்த ஏடிஎம் கார்டு நம்பர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவு செய்தார்.

ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், அவர் சம்பள பணம் எடுப்பதற்காக ஏடிஎம்மிற்கு சென்றார். அப்போது அவரது கணக்கில் இருந்து ₹3.23 லட்சம் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் உடனடியாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ₹3.23 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: