வத்திராயிருப்பு, டிச. 2: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத்தால் விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் புயலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி வத்திராயிருப்பு பகுதி 3 கண்மாய் பாசன விவசாயிகள் எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் உதவி பொறியாளர்கள் சந்திரமோகன், மலர்விழி, ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கனமழையின் காரணமாக பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்தும், சிற்றாறில் இருந்தும் பெரியகுளம், விராகசமுத்திரம், சீவநேரி உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.