கோவை, டிச. 2: கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி 64-வது வார்டு உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இது, 17.55 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 960 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு, மக்கள் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள். ஆனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, பாழடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த வீடுகளை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்துள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக துணை முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு, சுமார் ஒரு வருடம் ஆகியும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.