திருவாரூர், டிச.2: டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு விவசாயிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும் திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், சேகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசாமி, ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.