வேதாரண்யம்,நவ.30: வேதாரண்யம் வேதாமிர்தா ஏரியில் கருங்கல்லில் நந்தி மண்டபம் அமைக்கும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார். வேதாரண்யம் வேதாமிர்த ஏரி 17 ஏக்கரில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டு நிலையில் தற்போது முழுவதும் ஏரி தூர்வாரப்பட்டு உள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரி நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. தற்போது சுமார் ரூ.9 கோடி செலவில் ஏரியின் நான்குபுறமும் சுற்று சுவர் அமைத்து பூங்கா மற்றும் நடைப்பயிற்சிக்கான தளம் உள்ளிட்ட அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியின் மையப்பகுதியில் நந்தி மண்டபம் அமைக்கப்பட உள்ளது.