காரைக்குடி, நவ.27: மழைக்காலத்தில் பெறக்கூடிய தண்ணீரை முழுமையாக தேக்கி விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் மதுசூதனன்ரெட்டி உத்தரவிட்டார்.காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஊரக வாளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பாசனக் கண்மாய் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் மதுசூதனன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், ஒவ்வொரு பகுதிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாசனக்கண்மாய்களை ஆய்வு செய்து சரியாக உள்ளதா என உறுதி செய்திருக்க வேண்டும். மழைக்காலம் துவங்கிய பின் கரை பலப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.