கரூர், நவ. 25: பவித்திரம் அருகே பூபாளியில் பழுதான மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பூபாளி உள்ளது. இப்பகுதிகளில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்து சரி வர எரியாததால் இரவு நேரத்தில் பல்வேறு பணிகளுக்காக வெளியில் சென்று வரும் பொது மக்கள் மற்றும் பணியாளர்கள் தெருவில் நடந்து வர அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ என அப்பகுதி பொதுமக்கள் பலரும் அஞ்சுகின்றனர். மின் விளக்கை சீரமைக்க வேண்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.