சாயல்குடி. நவ.25: ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய பொதுநிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வெங்கலகுறிச்சி செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பு தலைவர் சித்ராமருது, பொருளாளர் கீழச்செல்வனூர் இக்பால் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன் வரவேற்றார்.