தேவாரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

தேவாரம், நவ.24: தேவாரம் பகுதிகளில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், லட்சுமி நாயக்கள் பட்டி, டி.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன் பட்டி மற்றும் பல்வேறு ஊர்களில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. இந்த நாய்களின் கர்ப்ப அபிவிருத்தி காலமாக நவம்பர் தொடங்கி ஜனவரி வரை உள்ள பனி காலமாகும். குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாய்கள் அதிக அளவில் கூடும். குட்டிபோடுவதற்கு இனவிருத்தியில் ஈடுபடுகிறது. இதனால் மக்கள் கூடும் பொது இடங்கள், சாலைகள் போன்றவற்றில் ஒன்று கூடி திரிகின்றன. சாலைகளில் செல்லும் பெரியவர்கள், சிறியவர்கள், கர்ப்பிணிகளை மிரட்டி வருகின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்ல அச்சம் உண்டாகி உள்ளது. எனவே தேவாரம் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: