சிவகாசி, நவ. 23: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியது. கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. 4 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் ரூ. 3 கோடி செலவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது. இதனை கடந்த 11ம் தேதி விருதுநகர் வந்த தமிழக முதல்வர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் புதிய கட்டடத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆர்டிஓ மூக்கன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சன் இந்தியா குரூப் அதிபர் பிரம்மன்,