திருவாரூர், நவ. 22: மீனவர்களையும் மீன்பிடித் தொழிலையும் அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய மீன்வள கொள்கையை ரத்து செய்யக்கோரி ஏஐடியுசி மீனவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களையும் மீன்பிடித் தொழிலையும் அழிக்கும் வகையில் மத்திய அரசு மூலம் கொண்டுவரப்பட்டுள்ள 2020 தேசிய மீன்வள கொள்கையினை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திட வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மீனவர் குறைதீர் கூட்டத்தினை அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நடத்திட வேண்டும். நலவாரிய அடையாள அட்டையினை விரைந்து வழங்கிட வேண்டும்.