தரங்கம்பாடி, நவ.22: தரங்கம்பாடி அருகே உள்ள அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் 1978ம் ஆண்டு ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின. இது குறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை தேடி வந்தனர். இந்நிலையில் இச்சிலைகள் லண்டனில் ஒருவரிடம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுத்து லண்டனில் இருந்து சிலைகளை சென்னைக்கு கொண்டு வந்தனர். அதன்பின் நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணத்தில் இருந்து வேன் மூலம் நேற்று அனந்தமங்கலம் கொண்டு வந்தனர்.