அரசுக்கு எதிராக போஸ்டர் பிளக்ஸ் அடிக்கக் கூடாது

திருச்செங்கோடு, நவ.21: திருச்செங்கோடு நகர பகுதியிலுள்ள அச்சக உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், நகர காவல் நிலையத்தில் நடந்தது. டிஎஸ்பி அசோக்குமார் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இதில் 17 அச்சக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அரசுக்கு எதிராகவோ, ஜாதி மத கலவரத்தை தூண்டும் விதமாகவோ, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாகவோ போஸ்டர்கள், பிளக்ஸ் மற்றும்  துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: