நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்

நாமக்கல், ஏப்.26: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்தவர் இன்ஜினீயர் கோகுல்ராஜ் (23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை, நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இதில், சங்ககிரி தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு யுவராஜ் கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். யுவராஜ் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று, நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நந்தினி வழக்கு விசாரணையை வரும் ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: