தனியார் தொழிற்சாலையில் தலையில் இரும்பு விழுந்து தொழிலாளி நசுங்கி பலி

விராலிமலை, நவ.21: திருச்சி மாவட்டம் வளநாடு கைகாட்டி அருகே உள்ள பிராம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் மாகாளி (48). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று மதியம் கம்பெனியில் கிரேனில் இரும்பை தூக்கும் போது கிரேனில் கொக்கி சரிவர மாட்டாமல் இருந்துள்ளது. கிரேன் இரும்பை தூக்கும் போது கொக்கி சாியாக மாட்டியுள்ளதா என பார்த்துள்ளார். அப்போது கொக்கி கழண்டு இரும்பு இவர் தலையில் விழுந்துள்ளது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்தில் மாகாளி பலியானார். இது குறித்து விராலிமலை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: