போளூர், நவ.13: சீன பட்டாசுகளை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போளூர் டிஎஸ்பி அறிவழகன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். போளூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், போளூர், கடலாடி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள 22 பட்டாசு கடைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
டிஎஸ்பி அறிவழகன் தலைமை தாங்கி பேசுகையில், `பட்டாசுகளை உரிமம் பெற்றுள்ள இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்,