தொண்டி, நவ.12: தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை அரசு கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தது. இதில் மீனவர்களை சில நாள்களில் விடுதலை செய்தது. படகுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த து படகுகளையும் உடைக்க நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018ம் வருடம் நம்புதாளையை சோந்த ஆறுமுகம், பழனி மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் படகுகளை விடுவிப்பதாக ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்நாள் முதல் இந்நாள் வரையிலும் இந்த படகுகளை மீட்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உடைக்க உள்ள படகுகளில் தங்கள் படகுகளும் உள்ளனவோ என்ற அச்சத்தில் உள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மீனவர்களின் படகுகளை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.