திருச்சி, நவ. 12: கொரோனா ேநாய் தொற்றின் காரணமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்த மக்கள் தற்போது கிடைத்துள்ள சில தளர்வுகளின் காரணமாக வெளியில் வர துவங்கி உள்ளனர். மக்களின் மிக முக்கிய மகிழ்ச்சிகளில் ஒன்று குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடுவது. தீபாவளி பண்டிகையையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
மக்களின் நலனில் என்றும் அக்கறையுடன் பல்வேறு விஷயங்களை செய்து வரும் நமது சூரியன் எப்எம் 93.5 தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மக்கள் மத்தியில் எஸ்எம்எஸ் உடன் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளான என்எஸ்பி ரோடு, பெரிய கடைவீதி, மலைக்கோட்டை, சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், ரயில்வே ஜங்ஷன் போன்ற அனைத்து பகுதிகளிலும் தன்னார்வலர்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.