ஊத்துக்கோட்டை: கீழ்கருமனூர் கண்டிகை பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடந்த புதர், தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே கீழ்கருமனூர் கண்டிகை, கயடை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்தம் பயன்பாடில்லாமல் இருந்தது. இதனால் பஸ் நிறுத்தம் முன்பு புதர்கள் மண்டிக்கிடந்தது.