அறந்தாங்கி, நவ.11: அறந்தாங்கியில் பெண் காவலருடன் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பாலா(25). இவர் அறந்தாங்கியில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அறந்தாங்கி பெரியகடைவீதியில் பணியில் இருந்த போது, அறந்தாங்கி களப்பக்காடு சிலோன் காலனியை சேர்ந்த மதன் வீரன் என்பவர் ஒரு வழிச்சாலையில் செல்ல முயன்றார். அப்போது பாலா ஒரு வழிச்சாலையில் செல்ல கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்|த மதன்வீரன் நான் அதிமுக காரன் உன்னை டிரான்ஸ்பர் செய்து விடுவேன் மிரட்டியுள்ளார். மேலும் காவலரை போட்டோ எடுத்து வாட்ச்அப்பில் பதிந்துள்ளார். இது குறித்து பாலா கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து மதன் வீரனை கைது செய்தனர்.