ராதாபுரம் ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து

திசையன்விளை, நவ.10: ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி புதிய நிர்வாகிகள் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.   ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அனிதா பிரின்ஸ், துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், மனோஜ், இசக்கிபாபு, ரூபிஸ்டன், சுபாஷ் சாம் கபிரியேல் மற்றும் திசையன்விளை நகர இளைஞரணி செயலாளர் நெல்சன், துணை அமைப்பாளர்கள் முத்தழகன், செந்தில், விமலன் ஆகியோர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் ஞானதிரவியம் எம்பி ஆகியோரிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றனர்.

 நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜான்ரவீந்தர், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சூசை அந்தோனி, மாவட்ட பிரதிநிதி நவநீதகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், கபடிரவி, உறுமன்குளம் ஊராட்சி செயலாளர் அமைச்சியார், கூத்தன்குழி ஊராட்சி செயலாளர் ராஜா, பெட்டைக்குளம் ஞானராஜ், ராமன்குடி சுதாகர், சிவகணேஷ், தத்துவநேரி கிளை செயலாளர் மயில்ராஜ், தோப்புவிளை எழில் ஜோசப், டென்னீஸ், தலைவன்விளை விஜயகுமார், வாழைத்தோட்டம் வினித், கில்லஸ்பி, அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: