ஏரியில் மண் அள்ளிய ஜேசிபி, லாரி பறிமுதல்

வந்தவாசி, நவ.10: வந்தவாசி அடுத்த கீழ்கொவளைவேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஜேசிபி மூலம் லாரியில் மண் கடத்துவதாக வந்தவாசி டிஎஸ்பி தங்கராமனுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் டிஎஸ்பி மற்றும் போலீசார் ஏரிக்கு சென்றனர். ேபாலீசாரை கண்டதும், மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகிறார்.

Related Stories: