வேட்டவலம், நவ.10: வேட்டவலம் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் இருதயதேவஆனந்த், பெயின்டர். இவரது மனைவி ரேணுகாம்பாள். வர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருதய தேவஆனந்த் கடந்த 4 ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் நிலத்திற்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, இருதயதேவ ஆனந்த் மரத்தில் தூக்கு போட்டு தொங்கியபடி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.