தஞ்சை, நவ.9: தஞ்ைச மாவட்டத்தை சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்களின் விடுதி விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சுற்றுலா அமைச்சகம் புதிதாக தொடங்கியுள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த தரவு தளம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தங்களின் விடுதி விவரங்களை www.nidhi.nic.in மற்றும் www.saathi.qcin.org ஆகிய வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும். மேலும் “சாத்தி” என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் விடுதி உரிமையாளர்களுக்கு சுற்றுலா அமைச்சகம் இந்திய அரசு சுயசான்றிதழ் வழங்க உள்ளது.