கரூர், நவ. 9: கரூர் தாந்தோணிமலை அருகே சாலையை கடக்க முயன்ற ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கார் மோதி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியை சேர்ந்தவர் ஜோசப்(47). ஒய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் காரில் உறவினர்கள் சிலருடன் பெங்களூரு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு கரூர் சுக்காலியூர் ரவுண்டானா அருகே காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஒரு உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார்.