புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் கடந்த செப்.14ம் தேதி ஆண் நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த அய்யப்பன் (45) என்பதும், குடும்பத்தை பிரிந்து புதுச்சேரி வந்த இவர், மரக்காணத்தைச் சேர்ந்த கொய்யா பழ வியாபாரியான செல்வியிடம் ரூ.10 ஆயிரம் கடனுக்கு பழங்களை வாங்கி விற்றதும் தெரியவந்தது. ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் அய்யப்பன் டிமிக்கி கொடுத்த நிலையில், செல்வி அவரை தேடி வந்தார். இதனிடையே சம்பவத்தன்று சேதராப்பட்டு சாராயக்கடை பகுதியில் நின்றிருந்த அய்யப்பனை இவ்விவகாரம் தொடர்பாக செல்வியின் கணவர் பழனி (55), அரியாங்குப்பம் அரசு (40), வேன் டிரைவர் லாஸ்பேட்டை முத்து (42) ஆகியோர் சரமாரி தாக்கி, கரும்பு மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்து ஆம்பூர் சாலையில் வீசியது தெரியவந்தது.