கோவை, நவ. 6: கோவை பெரிய கடை வீதியில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினார்கள். கோவையில் உள்ள பழைய கட்டிடங்களை கண்டறிந்து அவற்றில் பாதுகாப்பு இல்லாமல் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பெரிய கடை வீதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.