திசையன்விளை, நவ.4: திசையன்விளையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் சேம்பர் செல்வராஜ் தலைமை வகித்தார். கீரைக்காரன்தட்டு விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் விஜயநாராயணம் குளம் நடுமடையிலிருந்து சுவிசேஷபுரம் குளம் வரை தனியாக கால்வாய் வெட்டுவதற்கு அரசிடம் முறையிடுவது, தாமிரபரணி -கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் புத்தன்தருவை குளத்தை சேர்க்க வேண்டும், கால்வாய் வெட்டப்படும் பாதையில் உள்ள பொன்னாக்குடியில் 6 வழிசாலை மேம்பாலம், செங்குளம் இரட்டை ரயில் பாலம் பணிகளை விரைந்து துவங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும்,