உசிலம்பட்டி, நவ.4: மதுரை மாவட்டத்திலேயே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை முதன்மை கல்லூரியாக மாற்றுவேன் என்று புதிய முதல்வர் ரவி உறுதிமொழியளித்தார். இக்கல்லூரியில் படித்த மாணவனே கல்லூரி முதல்வரானதும், அவருக்கு கள்ளர் கல்வி கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மாவட்டம், செல்லம்பட்டி காந்தி நகரை சேர்ந்த ஒ.ரவி 1982 முதல் 1985 வரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பிஎஸ்சி பயின்றார். அதன் பின்பு சிவகாசியில் எம்எஸ்சி எம்பில் முடித்து 1992ல் உதவி பேராசிரியராக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பணியாற்றினார். அடுத்து துறைத்தலைவராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்தார்.