புதுக்கோட்டை, நவ.4: ஊரா ட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புதுகை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது-. மாநில பொதுச் செயலாளர் மணிராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பணியின் போது உயிர் இழந்த ஊராட்சி செயலர்கள் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.