லாரி டிரைவர் மாயம்

திருச்செங்கோடு, நவ.3: திருச்செங்கோடு அருகே கொசவம்பாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(22). லாரி டிரைவரான  இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 30ம் தேதி வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: