விருதுநகர், நவ. 1: விருதுநகர் ஜிஹெச்சில் மேல்சிகிச்சைக்கு வந்த கர்ப்பணி பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த மதுரைபாண்டி மகள் பாண்டி செல்வி (21), கடந்த பிப்ரவரி மாதம் முருகேசனுடன் திருமணம் ஆனது. கர்ப்பிணியான பாண்டிசெல்வி சாத்தூர் ஜிஹெச்சில் கடந்த 3 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நிலையில் பாண்டி செல்விக்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக விருதுநகர் ஜிஹெச்சிற்கும், குழந்தை பாளையம்கோட்டை ஜிஹெச்சிற்கும் அனுப்பப்பட்டது.