தரங்கம்பாடி, நவ.1: திருக்கடையூரில் சம்பா பயிர்களை நாசம் செய்யும், மேலும் அப்பகுதியில் சுகாதார கேடுகளை விளைவிக்கும் பன்றிகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதிபட்டு வருவதால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் வயல்களில் நடப்பட்டுள்ள சம்பா பயிர்களை அந்த பகுதியில் உள்ள பன்றிகள் கூட்டமாக வந்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். மேலும் திருக்கடையூரில் பிரசித்திப்பெற்ற அமிர்தகடேஸ்வரர்கோவில் உள்ளது. இங்கு காளசம்ஹாரமூர்த்தி தனிசன்னதியில் இருந்து அருள்பாலித்து வருகிறார். 60, 70, 80 பிறந்தநாளில் இக்கோவிலுக்கு வந்து அமிர்தகடேஸ்வரர் அபிராமிஅம்மன், காலசம்ஹாரமூர்த்தி சந்நிதியில் வழிபாடு செய்வதும் ஆயில்ஹோமம் செய்து கொள்வதும் சிறப்பாக கருதபடுகிறது.