நாகர்கோவில், அக்.30: குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த சாரல் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. நேற்று காலை வரை அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 29 மி.மீ மழை பெய்திருந்தது.பெருஞ்சாணியில் 27.4, சிற்றார்-2ல் 5, மாம்பழத்துறையாறு 3, ஆனைக்கிடங்கு 5, புத்தன் அணை 26.6, நாகர்கோவில் 28.2, பூதப்பாண்டி 7.6, சுருளோடு 50.8, கன்னிமார் 1.8, ஆரல்வாய்மொழி 20, பாலமோர் 8.4, மயிலாடி 4.2, கொட்டாரம் 3.8 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.