ஓட்டப்பிடாரம், அக். 29: மணியாச்சியில் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கான குடிநீர் திட்டப் பணிகளை சண்முகையா எம்எல்ஏ துவக்கிவைத்தார். ஓட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட மணியாச்சி கிராமத்தில் மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமை வைத்தார். யூனியன் ஆணையாளர் ஹெலன் பொன்மணி, பிடிஓ வளர்மதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சண்முகையா எம்.எல்.ஏ., திட்டப்பணிகளை கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.