திருச்செங்கோடு, அக்.28: திருச்செங்கோடு தாலுகா உஞ்சனை- நல்லிபாளையம் இடையே சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில், ஒப்பந்ததாரர் பணியை நிறுத்தியதால் 2 மாதமாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம், உஞ்சனை ஊராட்சியில் இருந்து குட்டிக்காபாளையம் வழியாக, நல்லிபாளையம் ஊராட்சிக்கு செல்லும் பழைய தார்சாலையை அகற்றி விட்டு, புதிய தார்சாலை அமைக்க, கடந்த 2 மாதத்திற்கு முன்பே சாலை பறிக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஜல்லிக்கற்கள் கொட்டிய ஒப்பந்ததாரர், சமன் செய்து தார்போடும் பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டார்.