கன்னியாகுமரி, அக்.21: கன்னியாகுமரி அருகே இடையன்விளையில் மளிகை கடையை உடைத்து ₹ 57 ஆயிரம் பணம், ₹ 12 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல்(45). கடந்த 6 வருடமாக கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் இடையன்விளை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது திருமணம், புதுமனை புகும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்துகிறவர்கள் இவரது கடையில் மொத்தமாக மளிகை பொருட்கள் வாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இந்த பகுதியில் நடக்கும் 2 நிகழ்ச்சிகளுக்காக மளிகை பொருள் வாங்க 2 பேர் ₹ 57 ஆயிரம் கொடுத்திருந்தனர். அந்த பணத்தை அவர் கடையில் வைத்து விட்டு இரவு சுமார் 10.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.