வேட்டவலம், அக்.21: வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் இடத்தை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் ஆய்வு செய்தார். கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு 2020- 2021ம் ஆண்டிற்கான பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கும், பிற சமூகத்தை சேர்ந்த 19 பயனாளிகளுக்கும் என மொத்தம் 29 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.