கடலூர், அக். 20: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 586 ஆனது. கடலூர் நகரில் 2 பேர் இறந்ததை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 263 ஆனது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 86 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,586 ஆனது. நேற்று 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில்இதுவரையில் 21 ஆயிரத்து 331 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 893 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.