கீழக்கரை, அக்.20: கீழக்கரை பகுதியில் நோய் பாதித்த நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இவைகளை பிடித்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை பகுதி மாயாகுளம் மங்கேள்ஸ்வரி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதில் சில வெறி நாய்களும் உள்ளன. சில நாய்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு அச்சமூட்டும் வகையில் திரிகிறது. இதனால் சாலையில் செல்லும் சிறுவர் சிறுமிகள் உள்ளிட்ட பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெளியே வருபவர்களின் பைகளை இழுத்தும், சீருடைகளை கிழித்தும் விடுகின்றன.