பணி பாதுகாப்பு கேட்டு

கும்பகோணம், அக். 20: போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்தி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போதே அனைத்து பணபலன்களை வழங்ககோரி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வாயில் முன் போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல பொது செயலாளர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். பொது செயலாளர் அண்ணாதுரை, நாகை மண்டல பொது செயலாளர் ராஜ்மோகன், கலை இலக்கிய பிரிவு மாநில துணை செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் நந்திவனம் பாலா, துணை தலைவர் துரைமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: