தாலுகா அலுவலகங்களில் மனுநீதி நாள் முகாம் மக்கள் கூட்டம் வராததால் கலெக்டர் அலுவலகம் வெறி

கரூர், அக். 20: மனுக்கள்பெறும் முகாம்கள் பல்வேறு தாலுகா அலுவலங்களில் நடைபெற்று வருவதால் கலெக்டர் அலுவலகம் நேற்றும் வெறிச்சோடிய நிலையில்தான் காணப்பட்டது. வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் திங்கள் கிழமையான நேற்றும் கரூர் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியே காணப்பட்டது. குறிப்பிடத்தக்க அளவில்தான் பொதுமக்களும், தனி நபர்களும் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்து சென்றனர்.

Related Stories: